Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தர்ப்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு கிடையாது: அரசு திட்டவட்டம்

தர்ப்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு கிடையாது: அரசு திட்டவட்டம்

தர்ப்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு கிடையாது: அரசு திட்டவட்டம்

தர்ப்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு கிடையாது: அரசு திட்டவட்டம்

ADDED : செப் 20, 2025 02:32 AM


Google News
சென்னை:'தர்ப்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது' என, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தர்ப்பூசணி பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்டு விற்பனை செய்வதாக, உணவுத் துறை அதிகாரி சதீஷ்குமார், சமூக வலைதளங்களில் கூறினார்.இதனால், கடந்த ஏப்ரல் - மே வரை, தர்ப்பூசணி பழங்கள் விற்பனை கடுமையாக பாதித்தது; விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.

'தர்ப்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நல சங்க தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட மூன்று விவசாயிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பின்படி, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி அளித்துள்ள விளக்கம்:

தர்ப்பூசணியின் அதிக உற்பத்தியே விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். நடப்பாண்டு விலை குறைவு, வியாபார போட்டியாளர்களின் தவறான பிரசாரத்தால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் பாதிப்புக்கு மட்டுமே, நிவாரணம் பெற வழி உள்ளது. பழத்தை அறுவடை செய்ய முடியாததற்கோ அல்லது சந்தை விலை குறைந்ததற்காகவோ, இழப்பீடு வழங்க இயலாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us