ஒரு லிட்டர் நீர் சுத்திகரிக்க 1.8 பைசா மட்டுமே
ஒரு லிட்டர் நீர் சுத்திகரிக்க 1.8 பைசா மட்டுமே
ஒரு லிட்டர் நீர் சுத்திகரிக்க 1.8 பைசா மட்டுமே
சுத்திகரிப்பு ஆலைகள்
'அப்சல்யூட் வாட்டர்' என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தினர் கழிவுநீரை, சுத்தமான குடிநீராக மாற்றுகின்றனர். இவர்கள் 1 கே.எல்.டி., முதல் 2 எம்.எல்.டி., வரை திறன் கொண்ட 100 சதவீதம் பசுமைக் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை வடிவமைத்து, நிறுவுவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் வைத்திருப்பதற்காக, உயிரி வேதிப்பொருட்கள் மற்றும் வினையூக்கிகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆலைகளின் முழு செயல்பாடுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரசாயனப்பொருட்கள் பயன்பாடு இல்லை,; சேறும் உற்பத்தியாகாது.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது
குடிநீருக்கு, 85 சதவீதம் மாற்றம்; மீதம் 15 சதவீதம் நிராகரிப்பு என்பது உயர்தர திரவ உரமாக மாறுகிறது; பாக்டீரியா, வைரஸ், நோய்க்கிருமிகளை நீக்குகிறது. சோலார் ஆற்றல் பயன்பாட்டால் 24 மணி நேரமும் வேலை செய்ய முடியும். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது. மின்சாரம் ஒரு தடையாக இருக்காது. முதலீட்டில் அதிக வருமானம்; குறைந்த செலவுகள். ஒரு லிட்டர் நீர் சுத்திகரிக்க 1.8 பைசா மட்டுமே செலவாகிறது.
மூன்று நிலை வடிகட்டுதல்
இறுதி நிலைப்பயன்பாட்டை பொறுத்து, நீரில் மூன்று நிலை வடிகட்டுதல் உள்ளது: