தினம் தினம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே கேள்வி: திருமாவின் இன்றைய குறி விஜய்!
தினம் தினம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே கேள்வி: திருமாவின் இன்றைய குறி விஜய்!
தினம் தினம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே கேள்வி: திருமாவின் இன்றைய குறி விஜய்!

வன்முறை அல்ல
இது வன்முறை அல்ல. கூட்ட நெரிசல். அங்கே மணி கணக்கில், ஏறத்தாழ எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் காத்திருந்தவர்கள், நேரம் ஆக ஆக, கூட்டம் அதிகரிக்கும் நிலையில், ஏற்பட்ட நெரிசல், ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொண்டால் போதும் என்ற எண்ணத்திற்கு, தள்ளப்பட்ட நிலையில், கீழே விழுந்தவர்களை மிதித்து கொண்டு தப்பித்து ஓடி இருக்கிறார்கள். அப்படிபட்ட ஒரு துயரம் தான் அங்கே அரங்கேறியது. அதனால் தான் 41 பேர் உயிரிழந்தார்கள்.
பாஜ போல் பேசும் விஜய்
ஆனால் இது ஒரு திட்டமிட்ட சதி போல் பாஜ மற்றும் விஜய் ஒரே மாதிரி பேசுகிறார்கள். ஆகவே இருவரும் ஒரே நேர்க்கோட்டில் தான் பயணிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இப்போது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாஜவுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. தமிழக அரசியலில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும்.
திடீரென கரிசனம்
ஹேமமாலினிக்கு தமிழர்கள் மீது திடீரென கரிசனம் வந்துவிட்டது. கரூரில் நடந்த அவலம் குறித்து அவர் ஆய்வு நடத்த வந்து இருக்கிறார். இது விபத்தாக தோன்றவில்லை, இதில் ஏதோ சதி இருக்கிறது என்று அதற்கு ஒரு புதிய கோணத்தை, ஒரு புதிய தோற்றத்தை, மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.


