Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/காங்., எம்.பி., ஜோதிமணிக்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு

காங்., எம்.பி., ஜோதிமணிக்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு

காங்., எம்.பி., ஜோதிமணிக்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு

காங்., எம்.பி., ஜோதிமணிக்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு

ADDED : பிப் 12, 2024 05:04 PM


Google News
Latest Tamil News
கரூர்: கரூர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என அம்மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் லோக்சபா தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தாந்தோணிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.சேகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் பலர் பேசினர். அவர்கள் அனைவரும் 'கூட்டணியில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தரவேண்டும். தற்போதைய எம்.பி., ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது. முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர்.

முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனிடம் க.பரமத்தி வட்டார துணை தலைவர் விசுவை ஆர்.செந்தில் குமார் அவரது ரத்தத்தில் எழுதிய கடிதத்தை வழங்கினார். அதிலும் 'ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்க கூடாது, முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்' என தமிழக காங்., தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதம் மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவருக்கு கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்க வேண்டாம் என அகில இந்திய, தமிழக தலைமையை கேட்டுக் கொள்வது பற்றியும், எம்.பி., ஜோதிமணி தமிழக காங்கிரஸ் தலைவர், கட்சி நிர்வாகிகளிடம் மோதல் போக்கை கடைபிடித்து சர்வாதிகாரமாக நடந்து கொள்ளும் போக்கை வன்மையாக கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us