Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சட்டவிரோத குடியேற்றம்: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாடு திரும்பிய வங்கதேசத்தினர் 2 ஆயிரம் பேர்!

சட்டவிரோத குடியேற்றம்: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாடு திரும்பிய வங்கதேசத்தினர் 2 ஆயிரம் பேர்!

சட்டவிரோத குடியேற்றம்: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாடு திரும்பிய வங்கதேசத்தினர் 2 ஆயிரம் பேர்!

சட்டவிரோத குடியேற்றம்: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாடு திரும்பிய வங்கதேசத்தினர் 2 ஆயிரம் பேர்!

UPDATED : ஜூன் 02, 2025 09:08 AMADDED : ஜூன் 02, 2025 09:04 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, கடும் நடவடிக்கைக்கு பயந்து, இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தானாக முன்வந்து நாடு திரும்பி உள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தியது. இதில், பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் சூறையாடப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தற்போது எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, கடும் நடவடிக்கைக்கு பயந்து, இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தானாக முன்வந்து நாடு திரும்பி உள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்தியா-வங்கதேச எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தானாக முன் வந்து நாடு திரும்புகின்றனர்.திரிபுரா, மேகாலயா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக, டில்லி மற்றும் ஹரியானாவில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாடு திரும்பி உள்ளனர். அசாம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us