பழநி முருகன் கோயிலில் ஊழியர்கள் தாக்கியதில் பக்தர் மண்டை உடைப்பு
பழநி முருகன் கோயிலில் ஊழியர்கள் தாக்கியதில் பக்தர் மண்டை உடைப்பு
பழநி முருகன் கோயிலில் ஊழியர்கள் தாக்கியதில் பக்தர் மண்டை உடைப்பு


கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்
பொட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் முத்துராஜா 20. அங்குள்ள தனியார் கல்லுாரியில் பணிபுரிந்துள்ளார். இவரும், மாமா மகன் அஜித்தும் 20, கடந்த 2014 டிச.14 ல் பொட்டப்பாளையம் அருகே குசவபட்டி ரோட்டில் உள்ள குழாயில் குளித்துள்ளனர். அந்த வழியாக வந்த பாட்டம் கிராமத்தை சேர்ந்த முத்து விஜி , பால்பாண்டி 35, பிரசாந்த் 28 மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேரும் தகராறு செய்து அஜித்தையும் முத்துராஜாவையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் முத்துராஜா உயிரிழந்தார்.
சிறுமி பலாத்கார வழக்கு: மூவருக்கு 90 ஆண்டு சிறை
கேரள மாநிலம் கஜானா பாறையில் ஏலத்தோட்டத்தில் வேலை செய்யும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினரின் 15 வயது மகள், ஆண் நண்பருடன் 2022 மே 29ல் பூப்பாறைக்குச் சென்றார். அங்கு தேயிலை தோட்டம் அருகே பேசிக் கொண்டிருந்த சிறுமியை பூப்பாறை லட்சம் காலனியைச் சேர்ந்த சாமுவேல் 22, அரவிந்த், பூப்பாறைக்கு பணிக்கு வந்த தேனி மாவட்டம் போடி தர்மத்துபட்டியைச் சேர்ந்த சிவகுமார் 19, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வலவூரைச் சேர்ந்த சுகந்த் 22, இரு சிறுவர்கள் ஆகியோர் ஆண் நண்பரை அடித்து விரட்டிவிட்டு சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சாந்தாம்பாறை போலீசார் ஆறு பேரையும் கைது செய்தனர்.
குடும்பத்தினரை எரிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 49, முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சுகந்தி, 42. இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறால் கணவரை பிரிந்து, சுகந்தி குழந்தைகளுடன், அதே கிராமத்திலுள்ள தாய் வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வசிக்கிறார்.
குடும்ப தகராறில் வாலிபரை கொன்றவர் கைது
வேலுார் மாவட்டம், ஓடுகத்துார் அடுத்த ஓங்கபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம், 23, சென்ட்ரிங் தொழிலாளி. புலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி, 35. இவர், கவுதமின் அத்தை நிரோஷா, 30, என்பவரை நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.
சிறுவனுக்கு தொந்தரவு: இளைஞருக்கு சிறை
தேனி மாவட்டம் சாமாண்டிபுரம் உலகமுத்து மகன் விஜய். இவர் 2019 செப்., 20 ல் அப்பகுதியில் உள்ள குளத்தில் ஆடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு தந்தார். கம்பம் தெற்கு போலீசார் விஜயை கைது செய்தனர்.
பேரணியில் பங்கேற்ற மனைவிக்கு வெட்டு
தூத்துக்குடி அல்லிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா 35. அவரது மனைவி அமராவதி 28. இரண்டு குழந்தைகள் உள்ளனர். குணா வேலைக்கு செல்லவில்லை. அமராவதி மகளிர் சுய உதவி குழுவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
நக்சல் தாக்குதல்; 3 வீரர்கள் வீரமரணம்
சத்தீஸ்கரில் சுக்மா - பிஜாப்பூர் எல்லையில் அமைந்துள்ள தெஹல்குடேம் பகுதியில் நக்சல் ஒழிப்புப் படையினருடன் மாவட்ட ரிசர்வ் படையினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல் அமைப்பினர், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம சாவு
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் பர்ட்யு பல்கலையில், நம் நாட்டின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர், கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் படித்து வந்தார். இந்நிலையில் அந்த மாணவனின் தாயார் கவுரி, தன் மகன் காணவில்லை என அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகத்திற்கு புகார் அளித்தார். காணாமல் போன மாணவர் குறித்து பல்கலை நிர்வாகம் அளித்த புகாரின்படி போலீசார் தேடி வந்தனர்.


