Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சென் னை க்குள் பயணியரை ஏற்றி செல்லும் பிரச்னை: பேசி தீர்வு காண 'அட்வைஸ்'

சென் னை க்குள் பயணியரை ஏற்றி செல்லும் பிரச்னை: பேசி தீர்வு காண 'அட்வைஸ்'

சென் னை க்குள் பயணியரை ஏற்றி செல்லும் பிரச்னை: பேசி தீர்வு காண 'அட்வைஸ்'

சென் னை க்குள் பயணியரை ஏற்றி செல்லும் பிரச்னை: பேசி தீர்வு காண 'அட்வைஸ்'

ADDED : பிப் 01, 2024 10:59 PM


Google News
சென்னை:சென்னை நகருக்குள் குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, அரசும், ஆம்னி பஸ் உரிமையாளர்களும் பேசி தீர்வு காண, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

'சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்து தான், தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களை இயக்க வேண்டும்' என, கடந்த மாதம் 24ம் தேதி, போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு


இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஆம்னி பஸ் நிறுவனமான 'ஒய்.பி.எம் டிராவல்ஸ்' உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க, அனுமதிக்கவும் கோரினர்.

இவ்வழக்கு, நீதிபதி மஞ்சுளா முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''கோயம்பேட்டில் உள்ள இடத்தில், பஸ்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும்.

''கிளாம்பாக்கம் செல்லும் போது, குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும். அதற்கான இடங்களை, அரசு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''கோயம்பேட்டில் பஸ்களை நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படும். கிளாம்பாக்கத்தில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. புதிய பஸ் நிலையம் செல்ல, கோயம்பேடு, கிண்டி, தாம்பரத்தில் இருந்து பஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

''துாரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து, சனிக்கிழமை பேச்சு நடத்துகிறோம்,'' என்றார்.

தள்ளி வைப்பு


கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''பொதுமக்கள் யாரும், இந்த வழக்கை தொடரவில்லை; ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தான் வழக்கு தொடர்ந்துள்ளனர்,'' என்றார். மாற்று திறனாளிகள், மூத்த குடிமகன்களுக்கான அசவுகரியத்தையும் அரசு கவனத்தில் கொள்ளும்படி, வழக்கறிஞர் ராதா கோபாலன் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் பேச்சு நடத்தி, அதன் விபரங்களை தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும், 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

எதிர்காலத்தை கருதி, அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டதற்கு, தமிழக அரசுக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us