Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பிரேமலதா 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு

பிரேமலதா 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு

பிரேமலதா 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு

பிரேமலதா 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு

ADDED : அக் 05, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவின், 'ரோடு ஷோ'வுக்கு, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழகம் முழுதும், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கிருஷ்ணகிரியில் இன்று 'ரோடு ஷோ' சென்று, கேப்டன் ரத யாத்திரை வேன் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்.

இதனிடையே, கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் 'ரோடு ஷோ'வில், 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரியில், 'ரோடு ஷோ' மற்றும் வேன் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

மேலும், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அண்ணாதுரை சிலை எதிரே மேடை அமைத்து பொதுக்கூட்டம் பிரசாரம் மேற்கொள்ள பிரேமலதாவுக்கு அனுமதி அளித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us