Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பொங்கல் விடுப்பு முடிந்ததும் செய்முறை பயிற்சிக்கு உத்தரவு

பொங்கல் விடுப்பு முடிந்ததும் செய்முறை பயிற்சிக்கு உத்தரவு

பொங்கல் விடுப்பு முடிந்ததும் செய்முறை பயிற்சிக்கு உத்தரவு

பொங்கல் விடுப்பு முடிந்ததும் செய்முறை பயிற்சிக்கு உத்தரவு

ADDED : ஜன 15, 2024 01:54 AM


Google News
சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்ததும், பொது தேர்வு மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வழங்க, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச்சில் பொது தேர்வு நடத்தப்படுகிறது.

பிளஸ் 2வுக்கு மார்ச் 1 முதல், 22 வரை; பிளஸ் 1க்கு மார்ச் 4 முதல், 25 வரை; 10ம் வகுப்புக்கு, மார்ச் 26 முதல், ஏப்., 8 வரை பொது தேர்வுகள் நடக்கின்றன. பிளஸ் 2வுக்கு, பிப்., 12 முதல் 17 வரை செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி, பொங்கல் விடுமுறை முடிந்ததும், பள்ளிகளிலேயே செய்முறை தேர்வுக்கான ஆய்வக பயிற்சி வகுப்புகளை நடத்தி, மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us