Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்

கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்

கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்

கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்

ADDED : மே 25, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
கோவை,: தென்மேற்கு பருவ மழை எதிர்கொள்ள தயாராக இருப்பது தொடர்பாக, மாவட்ட அளவில் அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது.

அதன்பின், நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:


மழை பாதிப்பு ஏற்பட்டால், மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க, துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மரங்கள் விழுந்தால் அறுத்தெடுக்க, தேவையான மெஷின்கள், பொக்லைன், புல்டோசர் உள்ளிட்ட வாகனங்கள் தயாராக உள்ளன.

வால்பாறை மற்றும் டாப்சிலிப் பகுதிகளில், அதிக மழைக்கு வாய்ப்பிருக்கிறது; 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு முகாமிட்டுள்ளது. 80 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு குழு கோவையில் முகாமிட்டிருக்கிறது.

வால்பாறை அரசு கலை கல்லுாரியில் மீட்பு மையம் அமைத்திருக்கிறோம். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பகுதியில் போக்குவரத்து இடையூறு அல்லது நிலச்சரிவு ஏற்பட்டால், மீட்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வால்பாறை, அட்டக்கட்டி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் குழுக்கள் தயாராக உள்ளன.

ஆறுகள், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக, பவானி ஆற்றுப்பகுதிக்குச் செல்வதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 1077 அல்லது, 0422 3206051 ஆகிய எண்ணுக்கு அழைக்கலாம்.

மாவட்ட அளவில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நீர் வழங்கு வாய்க்கால் துார்வாரும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது; 75 சதவீதம் முடிந்திருக்கிறது.

நகர்ப்புறத்தில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

தண்ணீரை உடனுக்குடன் அகற்ற, ஜெனரேட்டர் வசதியுடன் கூடுதலாக, மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதிக தண்ணீர் தேங்கும்போது, போக்குவரத்தை மாற்றியமைக்க, போலீசாருடன் மாநகராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவர்.

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சமுதாய கூடங்கள், அரசு பள்ளிகளில் பொதுமக்களை தங்க வைக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் தடைபட்டாலோ அல்லது, தண்ணீர் தேங்கினாலோ, உதவி மையத்துக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

அப்போது, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.

கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

கோவைக்கு நாளை வரை அதிக மழை இருக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி பகுதியில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிராந்திகுமார் நேற்று ஆய்வு செய்தார். அவிநாசி ரோடு மேம்பாலம், காளீஸ்வரா மில் அருகே உள்ள சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் உறிஞ்சி அகற்ற கூடுதல் மின் மோட்டார் அமைத்திருப்பது, சங்கனுார் பள்ளத்தை துார்வாருவது உள்ளிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டார்.



கட்டுப்பாட்டு அறை எண்கள்

கோவை கலெக்டர் அலுவலகம் - 0422 - 1077, 0422-2301114மாநகராட்சி பிரதான அலுவலகம் - 0422 - 2302323 வாட்ஸ் அப் - 81900 00200மாநகராட்சி வடக்கு மண்டலம் - 0422-2243133மாநகராட்சி தெற்கு மண்டலம் - 0422-2252482மாநகராட்சி கிழக்கு மண்டலம் - 0422-2577056மாநகராட்சி மேற்கு மண்டலம் - 0422-2551700மாநகராட்சி மத்திய மண்டலம் - 0422-2215618வால்பாறை நகராட்சி - 04253-222394பொள்ளாச்சி நகராட்சி - 04259-220999மேட்டுப்பாளையம் நகராட்சி - 04254-222151மதுக்கரை நகராட்சி - 0422-2511815கூடலுார் நகராட்சி - 0422-2692402கருமத்தம்பட்டி நகராட்சி - 0421-2333070காரமடை நகராட்சி - 04254-272315மேட்டுப்பாளையம் தாலுகா - 04254-222153அன்னுார் தாலுகா - 04254-299908கோவை வடக்கு தாலுகா - 0422-2247831கோவை தெற்கு தாலுகா - 0422-2214225சூலுார் தாலுகா - 0422-2681000பேரூர் தாலுகா - 0422-2606030மதுக்கரை தாலுகா - 0422-2622338கிணத்துக்கடவு தாலுகா - 04259-241000பொள்ளாச்சி தாலுகா - 04259-226625ஆனைமலை தாலுகா - 04253-296100வால்பாறை தாலுகா - 04253-222305







      Our Apps Available On




      Dinamalar

      Follow us