வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு 6 நாட்களுக்கு பின் மீண்டும் நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு 6 நாட்களுக்கு பின் மீண்டும் நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு 6 நாட்களுக்கு பின் மீண்டும் நீர் திறப்பு
ADDED : பிப் 12, 2024 06:16 AM

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக 6 நாட்களுக்குப் பின் நேற்று காலை 6:00 மணிக்கு மீண்டும் நீர் திறந்து விடப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பெய்த மழை, பெரியாறு அணை நீர் வரத்தால் நீர்மட்டம் நவ.,10ல் 70.16 அடியாக உயர்ந்தது. அன்று முதல் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக சில மாதங்களாக தண்ணீர் தொடர்ந்து வெளியேறியது. தொடர்ந்து பெய்த மழையால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து ஜனவரி 6 அதிகாலை 4:45 மணிக்கு முழு அளவான 71 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் முழுவதும் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கும் நீர் திறந்து விடப்பட்டது.
ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் ஜனவரி 23ல் நிறுத்தப்பட்டது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக வெளியேறிய நீரும் பிப்., 6ல் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட நீர் 6 நாட்களுக்குப் பின் நேற்று காலை 6:00 மணிக்கு மீண்டும் வினாடிக்கு 2000 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 69.64 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1056 கன அடியாக இருந்தது.