பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் வரலாறு காணாத மழை: கேரளாவுக்கு தண்ணீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் வரலாறு காணாத மழை: கேரளாவுக்கு தண்ணீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் வரலாறு காணாத மழை: கேரளாவுக்கு தண்ணீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

கடைமடை வரை
தண்ணீர் வேண்டும்
முல்லை பெரியாறு அணை வாயிலாக, தேனி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், பதினெட்டாம் கால்வாயின் முதல்கட்டப் பணிகள், கம்பம் சட்டசபை தொகுதிக் குட்பட்ட தேவாரம் வரை முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இந்த கால்வாயை, போடிநாயக்கனுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கூடலிங்கம் ஆறு வரை நீட்டித்து, முல்லை பெரியாறு நீரும், கூடலிங்கம் வரை வந்தடைந்தது. ஆனால், மூன்று ஆண்டுளாக நீர் கூடலிங்கம் வருவதில்லை; தேவாரம் வரை மட்டுமே வருகிறது. இதனால், போடி நாயக்கனுார் பகுதிக்குட்பட்ட கிராமங்களில், விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது. என் தொகுதி என்பதற்காக, அரசு இதில் பாரபட்சமாக செயல்படுகிறதா என தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின், இதில் கவனம் செலுத்தி, பதினெட்டாம் கால்வாயை சீரமைத்து, கூடலிங்கம் ஆறு வரை நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். - பன்னீர்செல்வம் -முன்னாள் முதல்வர்


