Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!

தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!

தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!

தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!

ADDED : செப் 24, 2025 11:49 AM


Google News
Latest Tamil News
சென்னை: தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை ரிலையன்ஸ் குழுமம் அமைக்க உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூலமாக 2 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

* தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் ரிலையன்ஸ் குழுமம் தொழிற்சாலை அமைக்க உள்ளது.

* 60 ஏக்கரில் அமையும் இந்த தொழிற்சாலையில் பிஸ்கட், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை தயாரிக்கப்பட உள்ளன.

* அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூலமாக 2,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாங்கள் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us