Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தில் தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கணும்: மத்திய அமைச்சர் விருப்பம்

தமிழகத்தில் தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கணும்: மத்திய அமைச்சர் விருப்பம்

தமிழகத்தில் தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கணும்: மத்திய அமைச்சர் விருப்பம்

தமிழகத்தில் தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கணும்: மத்திய அமைச்சர் விருப்பம்

ADDED : ஜூலை 17, 2024 03:59 PM


Google News
Latest Tamil News
சென்னை: 'தமிழகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலை சம்பவம் அதிகரித்து வருவதால் தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்' என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார். அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு, இன்று (ஜூலை 17) மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்றார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி ராம்தாஸ் அத்வாலே மரியாதை செலுத்தினார்.

பாதுகாப்பு அதிகரிக்கணும்!

ராம்தாஸ் அத்வாலே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலை சம்பவம் அதிகரித்து வருவதால் தலைவர்களின் பாதுகாப்பு முக்கியம். கிருஷ்ணசாமி, திருமாவளவன் மற்றும் ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

சி.பி,ஐ., விசாரணை

தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்பவர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி,ஐ., விசாரணை மூலம் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us