Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ விடுதியில் மதம் மாற்ற முயற்சி வார்டன் மீது மாணவியர் புகார்

விடுதியில் மதம் மாற்ற முயற்சி வார்டன் மீது மாணவியர் புகார்

விடுதியில் மதம் மாற்ற முயற்சி வார்டன் மீது மாணவியர் புகார்

விடுதியில் மதம் மாற்ற முயற்சி வார்டன் மீது மாணவியர் புகார்

ADDED : செப் 19, 2025 02:44 AM


Google News
சிவகங்கை:காளையார்கோயில் அரசு விடுதியில், பைபிள் வாசிக்குமாறு மாணவியரை வற்புறுத்துவதோடு, மதம் மாற்ற முயற்சிப்பதாக வார்டன் மீது புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் எதிரே அரசு மாணவியர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 68 பேர் தங்கியுள்ளனர். வார்டனாக காரைக்குடி லட்சுமி பணிபுரிகிறார்.

தன் மகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் லட்சுமி ஈடுபடுவதாக, மருதங்கநல்லுாரை சேர்ந்த மணிமேகலை, கலெக்டர் பொற்கொடியிடம் புகார் அளித்தார்.

மணிமேகலை கூறுகையில், 'மாணவியரை தினமும் பைபிள் வாசிக்க செய்து, கடவுள் வணக்க கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் வற்புறுத்தினார். மதம் மாற்றும் முயற்சியில் வார்டன் ஈடுபட்டு வருகிறார். அழுகிய காய்கறிகளை பயன்படுத்தி சமைக்கின்றனர். இது குறித்து கலெக்டரிடம் புகார் செய்தேன்,'' என்றார்.

லட்சுமி கூறுகையில், ''காலாண்டு, அரையாண்டு தேர்வின் போது, பைபிள் வைத்து கடவுள் வணக்கம் பாடச் சொன்னோம். புகார் எழுந்தபின் நிறுத்திவிட்டோம். இப்புகார் குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலும் எழுத்துபூர்வ விளக்கம் அளித்து விட்டேன்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us