Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை

ADDED : மார் 11, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு பிறவி பொய்யர். 2 நிமிடங்களில், அவர் சுமார் 10 பொய்களை எளிதில் பரப்புகிறார் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:



தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு பிறவி பொய்யர். 2 நிமிடங்களில், அவர் சுமார் 10 பொய்களை எளிதில் பரப்புகிறார். அத்தகைய நிபுணர்.

முழு திமுக சுற்றுச்சூழல் அமைப்பும் தவறான உண்மைகளையும் அரை உண்மைகளையும் மட்டுமே பரப்புவதில் செழித்து வளர்கிறது. சமீப காலமாக மக்கள் அவரது உரைகளைப் பார்க்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை, ஏனெனில் அவற்றில் எந்த உண்மையும் இல்லை, பொய்கள் மட்டுமே உள்ளன.

இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார் . மேலும் முதல்வர் பேச்சு தொடர்பாக வீடியோ ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

மும்மொழிக் கல்வி நிச்சயம்




தமிழகத்தில், ஏழை, எளிய மாணவர்கள், அரசுப் பள்ளியில் மும்மொழிகள் பயிலும் வாய்ப்பையும் வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிப் போராட்டம் நடத்திய கோயம்புத்தூர் தெற்கு மாவட்டத் தலைவர் திரு சந்திரசேகர், முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்த் கோவை பா.ஜ., உள்ளிட்ட நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திமுகவினர் நடத்தும் பொய்யான போராட்டங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது, பாஜகவின் போராட்டங்களைத் தடுப்பது என, முற்றிலும் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது திமுக அரசின் காவல்துறை.

சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பொதுமக்களிடையே கிடைத்து வரும் ஆதரவு கண்டு, முதல்வர் ஸ்டாலின் பயந்து போயிருக்கிறார் என்பதுதான், இது போன்ற அதிகார அடக்குமுறைகளுக்குக் காரணம். நீங்கள் எப்படி முயற்சித்தாலும், தமிழகத்தில் மும்மொழிக் கல்வி நிச்சயம் வரும் முதலமைச்சர் அவர்களே.

இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us