தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய் ஆசை
தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய் ஆசை
தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய் ஆசை
UPDATED : ஜூன் 28, 2024 11:09 AM
ADDED : ஜூன் 28, 2024 10:42 AM

சென்னை:
‛‛தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. நல்லா படித்தவர்கள்
அரசியலுக்கு வரவேண்டும்; தலைவர்களாக வர வேண்டும்'' என மாணவர்கள் மத்தியில்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய் பேசினார்.
தமிழகத்தில்
உள்ள தொகுதி வாரியாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் 3 இடங்களை
பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, சென்னையில் இன்று (ஜூன் 28)
நடைபெற்றது. இந்தாண்டு இந்த விழாவை இன்று மற்றும் ஜூலை 3 என இரண்டு
கட்டங்களாக நடக்கிறது.
விழா நடைபெறும் மண்டபத்திற்கு வந்த
நடிகர் விஜய், நாங்குநேரியில் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மாணவன்
சின்னதுரையின் அருகில் அமர்ந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா
தொடங்கியது. விழாவில் மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:
எல்லா
துறைகளும் நல்ல துறையே; நமக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து 100 சதவீதம்
உழைத்தால் வெற்றிதான். தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது.
தலைவர்கள் என்பது அரசியலில் மட்டும் சொல்லவில்லை; மாணவர்களான நீங்கள்
செல்லும் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை.
நல்லா படித்தவர்கள்
அரசியலுக்கு வரவேண்டும்; தலைவர்களாக வரவேண்டும். தமிழகத்தில்
போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இது ஒரு பெற்றோராகவும், அரசியல்
இயக்க தலைவராகவும் எனக்கு அச்சமாக இருக்கிறது. ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல; அதற்கான மேடையும் இது இல்ல. நண்பர்கள் யாராவது தவறான பாதையில்
ஈடுபட்டால் அவர்களை திருத்த முயலுங்கள். தவறான பாதையில் யாரும்
ஈடுபடாதீர்கள்; அடையாளத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். இவ்வாறு அவர்
பேசினார்.