Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பெண்ணின் தந்தை வனராஜின் பின்னணி

பெண்ணின் தந்தை வனராஜின் பின்னணி

பெண்ணின் தந்தை வனராஜின் பின்னணி

பெண்ணின் தந்தை வனராஜின் பின்னணி

ADDED : ஜூன் 17, 2025 05:39 AM


Google News
திண்டுக்கல் மாவட்டம், விராலிபட்டி ராமநாயக்கன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் வனராஜ். இவர் தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.

பின், தொழில் முன்னேற்றம் காரணமாக கடமலைக்குண்டு அருகே செங்குளத்தில் தேங்காய் குடோன் வைத்து தேங்காய்களை வாங்கி, தமிழகம் முழுதும் விற்பனை செய்தார்.

மதுரையை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் நைல் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர்.வருஷநாடு பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு தேவையான உதவிகளை செய்ய வரும் போது, வனராஜுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர வருஷநாடு மாளிகை பாறை கருப்பணசாமி கோவில் மூத்த பூசாரி கார்மேகசுவாமிக்கும், வனராஜுவிற்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.

மாளிகை பாறை கருப்பணசாமி கோவிலுக்கு முன்னாள் காவல்துறை இயக்குநர்களாக இருந்தவர்கள் உட்பட பல்வேறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் வந்து குறி கேட்டு செல்வது வழக்கம்.

இதுபோன்ற சூழலில் வனராஜுவிற்கு கார்மேகசாமி மூலம் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் தொடர்பு கிடைத்திருக்கலாம் அல்லது கார்மேகசாமியிடம் நெருங்கி பழகக்கூடிய மகேஸ்வரி வாயிலாக, கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us