நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை
விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் ராஜ் 74. இவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். 2024 ல் இவரது கடைக்கு வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் டவுன் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
கபடி பயிற்சியாளருக்கு சிறை
சூலுார் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் அருண்குமார், 38. கபடி மற்றும் சிலம்ப பயிற்சி அளிக்கும் அகாடமி நடத்துகிறார். அரசு பள்ளி மாணவியர் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றனர். சில தினங்களுக்கு முன், அரசு பள்ளி ஒன்றில், மாணவியர் இரு குழுவாக பிரிந்து தகராறில் ஈடுபட்டனர். அவர்களிடம் தலைமையாசிரியர் விசாரித்தபோது, சில மாணவியருக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதுதொடர்பாக மாணவியருக்கு இடையே தகராறு நடந்ததும் தெரிந்தது.
டிராவல்ஸ் ஏஜன்ட் கைது
கோவை மாவட்டம், வடமதுரையை சேர்ந்த 22 வயது பெண், தடாகம் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன், ரோட்டோரத்தில் பேசிக்கொண்டிருந்தனர். குனியமுத்துாரை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜன்ட் அருண்பரத்,41 என்பவர், அப்பெண்ணை மொபைல் போனில் போட்டோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்தார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
சிங்கம்புணரியில் 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் பேக்கரி ஊழியர் அஜித்குமாருக்கு 32, இருபது ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சிங்கம்புணரி வடக்கு வளவில் உள்ள செட்டியார் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அங்குள்ள பேக்கரியில் பணிபுரிந்தார்.


