ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!
ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!
ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!

சுற்றுப்பயணம்
இதற்கிடையே, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்; 234 தொகுதிகளுக்கும் செல்கிறேன். எனது சுற்றுப்பயணம் தமிழக மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும்; நான் எப்போதும் மக்களுடனே பயணிக்கிறேன்.
பரிதாப நிலை
மக்கள் ஆதரவுடன் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க., வரலாறு படைக்கும். தேர்தலில் அ.தி.மு.க., வென்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிறகு ஸ்டாலின் எங்கள் வீட்டிற்கு வந்தால் வரவேற்போம். வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி உறுப்பினர்களைச் சேர்க்கும் அளவுக்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., பரிதாப நிலைக்குச் சென்றுவிட்டது.
விமர்சனம்
ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வது வழக்கமானதுதான், அதன்படியே விஜய்யும் விமர்சித்துள்ளார். தி.மு.க., ஆட்சியை அகற்றும் நோக்கத்தோடு உள்ள கட்சிகள் எங்களோடு இணையலாம். தி.மு.க., ஆட்சியை அகற்ற அனைவரும் இணையவேண்டும் என்பதே எனது விருப்பம். கூட்டணி நிலைப்பாடு குறித்து அமித்ஷா ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டார்.
முதல்வர் வேட்பாளர்
பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை வகிக்கும். அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ்., எல்லா ஊடகத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிட்டு உள்ளார்கள். அதையே ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்டு, விறுவிறுப்பான செய்தி வேணும் என்பதற்காக, திருப்பி திருப்பி அதற்கு ஏதாவது ஒரு வடிவத்தை கொடுத்து வெளியிடுவது சரியா? இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.