தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின்
தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின்
தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின்

6 கிராம சபை கூட்டங்கள்
கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்காகத் தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றும் விழா. குடியிருப்பு. சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
3 தீர்மானங்கள்
கிராம சபையில் மக்கள் ஆலோசித்து 3 முக்கிய தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடிசையில்லா தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. கிராமப்புற முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தியது சுய உதவி குழு திட்டம். மகளிர் சுய உதவி குழுக்களின் அடுத்த கட்ட பாய்ச்சல்தான் மகளிர் உதவித்தொகை. மகளிருக்கான விடியல் பயணத்திட்டம், பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பணத்தை தண்ணீராக செலவழிப்பதாக சொல்வார்கள். ஆனால் தண்ணீரை தான் பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
படிப்பு முக்கியம்
கிராமங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் அலட்சியம் கூடாது.


