சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி

பட்டியல்
*சிறுபான்மை இன மக்கள் அதிகம் வாழும் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் சராசரியாக 31 சதவீத வீடுகள் சிறுபான்மை இன மக்களுக்கு சென்று கொண்டு உள்ளது. இதை ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும்.
பிரதமருக்கு விருது
பிரதமர் மோடிக்கு 20 நாடுகள் உயரிய விருது கொடுத்து உள்ளன. அதில் 7 முஸ்லிம் நாடுகள் பிரதமருக்கு உயரிய விருது வழங்கி உள்ளது.சவுதி அரேபியா, ஆப்கன், பாலஸ்தீனம்,யுஏஇ,பஹ்ரைன், எகிப்து,குவைத் நாடுகள் தங்களின் உயரிய விருது கொடுத்து உள்ளன. அந்நாடுகள் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கின்றன.
முழு நேர பணி
முதல்வர் ஸ்டாலின் கையில் வரைபடத்தை கொடுத்து, மணிப்பூரை தொட்டு காட்டினால் அரசியலை விட்டு போகிறேன். மணிப்பூர் எங்கு இருக்கிறது என தெரியாது. மணிப்பூரில் நடந்ததற்கு பிரதமர் மோடி தான் என்ன காரணம் என சொல்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியி்ல், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என பெண்கள் ஆடையில்லாமல் நடந்து சென்றனர். மணிப்பூரில் அமைதி திரும்பும்போது இரண்டு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் ஏற்பட்டது. மாநில அரசு ராஜினாமா செய்து, கவர்னர் ஆட்சி வந்து நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.
நம்பாதீர்கள்
அண்ணாமலை கூறியதாவது: முதல்வர் பொறாமைப்படும் அளவுக்கு விழா நடந்தது. எங்கள் கட்சியி்ல் முஸ்லிம் சொந்தங்கள் உள்ளனர். அவர்கள் கட்சியை வழிநடத்துகின்றனர். நோன்பு திறப்பு விழாவை தி.மு.க., மட்டும்தான் நடத்த வேண்டும் என பட்டா போட்டு வைத்துள்ளார்களா.


