நுாற்றுக்கணக்கான கும்பாபிஷேகம் நடத்தி என்ன பயன்? தீபம் ஏற்றும் பிரச்னையில் ஓட்டுகளை இழக்கும் தி.மு.க.,
நுாற்றுக்கணக்கான கும்பாபிஷேகம் நடத்தி என்ன பயன்? தீபம் ஏற்றும் பிரச்னையில் ஓட்டுகளை இழக்கும் தி.மு.க.,
நுாற்றுக்கணக்கான கும்பாபிஷேகம் நடத்தி என்ன பயன்? தீபம் ஏற்றும் பிரச்னையில் ஓட்டுகளை இழக்கும் தி.மு.க.,

மூன்று முறை உத்தரவு
மலை மீதுள்ள தர்காவிற்கு, 50 மீ., துாரத்தில் தீபத்துாண் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து, நேரடி கள ஆ ய்வு செய்து தான் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எம்.பி.,யின் பூச்சாண்டி
ஹிந்து பக்தர்களுக்கு சாதகமாக உத்தரவு வந்த உடனே, முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர், கோவில் நகரான மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., வெங்கடேசன் தான். நடுநிலையோடு இருக்க வேண்டிய இந்த எம்.பி., 'கலவரம் ஏற்படும்' என்று பூச்சாண்டி காட்டினார்.
தி.மு.க.,வினர் கடுப்பு
மதுரை தி.மு.க.,வினர் கூறியதாவது:
மதுரையில் மிக சொற்பமான ஓட்டு வங்கி வைத்துள்ள மார்க்., -- கம்யூ., கட்சியை, கூட்டணி என்ற பெயரில் ஏற்கனவே நாங்கள் தான் 'துாக்கி சுமந்து' கொண்டிருக்கிறோம். எங்களோடு கூட்டணியில்லாமல் இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற முடியாது.
த.வெ.க., காரணமா?
வரும் தேர்தலில் தி.மு.க.,விற்கு முக்கிய போட்டியாக த.வெ.க., களம் இறங்குகிறது. தி.மு.க., பெற வேண்டிய, கணிசமான கிறிஸ்துவ சிறுபான்மையினரின் ஓட்டுகள் த.வெ.க., பக்கம் செல்லாமல் இருக்க, 'சிறுபான்மையினருக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு' என, காட்டிக்கொள்ள தி.மு.க., அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
இதே பிரச்னை
திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி கோவில் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதிலும் இதே பிரச்னை தான். பெரும்பான்மையாக கிறிஸ்துவர்கள் வாழும் அங்கு, கோர்ட் உத்தரவிட்டும், தீபம் ஏற்ற அரசு அனுமதிக்கவில்லை. அங்கும் 144 தடை உத்தரவு திடீரென பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வின் கபட நாடகம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்த தவறி, கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க, கபட நாடகமாடும் தி.மு.க., அரசின் செயல் கண்டனத்திற்குரியது.- எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர், சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து, தேவையற்ற பிரச்னைக்கு வழிவகுத்த தி.மு.க., அரசுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.
-பழனிசாமி,அ.தி.மு.க., பொதுச்செயலர்
அதிகாரம் நிலையானது அல்ல
ஹிந்துக்களுக்கு எதிராக, மத நம்பிக்கைகளுக்கு எதிராக, அறநிலையத்துறையே கோர்ட்டில் அப்பீல் செய்கிறது என்றால், அறநிலையத்துறை என்பதே கோவிலை அழிக்கும் அறங்கெட்ட துறையாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே ஆதாரம். ஆட்சி, அதிகாரம் நிலையானது இல்லை. ஆயிரம் தடைகள் வந்தாலும், நீதி வென்றே தீரும். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீதி துறையை அவமதிப்பதை ஹிந்து முன்னணி கண்டிக்கிறது.
- காடேஸ்வரா சுப்ரமணியம் ,ஹிந்து முன்னணி தலைவர்
அறப்போராட்டம் தொடரும்
திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் மாற்று மத அமைப்புகளுக்கு தி.மு.க., துணை போகக் கூடாது. மிக தெளிவாக தீர்ப்பளித்த பின்பும், நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதிப்பதும், மிரட்டுவதும், தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்த துாண்டுவதும் தி.மு.க., அரசு, தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வதாகும். ஹிந்து இயக்க தொண்டர்களின் மீது தமிழக அரசு அடக்குமுறையை தொடர்ந்தால், தமிழகம் முழுக்க ஜனநாயக அறப்போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.
-- அர்ஜுன் சம்பத் , ஹிந்து மக்கள் கட்சி தலைவர்
மரபு தொடர வேண்டும்
மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களால், காலங்காலமாக எந்த மரபுகள் பின்பற்றப்பட்டு வந்தனவோ, அந்த மரபுகள் பின்பற்றப்பட வேண்டும். இதுதான் அனைவருக்கும் நல்லது. மத விஷயங்களில் அரசாக இருந்தாலும், கட்சிகளாக இருந்தாலும் அரசியல் செய்யக் கூடாது. இதுதான் அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு.
- ஜெயகுமார் , அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்
மதக்கலவரத்தை துாண்டும் தி.மு.க.
தி.மு.க.,வின், நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும். ஆனால், மக்களிடம் பேதத்தை ஏற்படுத்தி, மதக்கலவரத்தை துாண்ட தி.மு.க., தயராகி விட்டது. தி.மு.க., ஓட்டு அரசியல் செய்வதால் இந்த பிரச்னைகள் தலைதுாக்கியுள்ளன.
- பொள்ளாச்சி ஜெயராமன்அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,


