ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது டி-20: இந்தியா புதிய சாதனை
ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது டி-20: இந்தியா புதிய சாதனை
ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது டி-20: இந்தியா புதிய சாதனை
UPDATED : ஜூலை 10, 2024 08:22 PM
ADDED : ஜூலை 10, 2024 08:13 PM

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில்இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே சென்று இந்திய அணி அங்கு 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஹராரேயில் துவங்கிய 3வது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங்கை தேர்வு செய்தது.தொடர்ந்து இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சுப்மன் கில் 66 ருதுராஜ் கெய்க்வாட் 49 , ஜெய்ஸ்வால் 36 என அதிகபட்ச ரன்கள் எடுத்தனர்
183 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதன் மூலம் 20 ஓவர் போட்டி வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி இந்திய கிரிக்கெட் அணி என்ற பெருமை பெற்றது.