பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மணிலா ஏர்போர்ட்டில் கைது
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மணிலா ஏர்போர்ட்டில் கைது
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மணிலா ஏர்போர்ட்டில் கைது
ADDED : மார் 12, 2025 02:00 AM

மணிலா : ஹாங்காங் நாட்டிலிருந்து நேற்று விமானத்தில் வந்திறங்கிய பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், 79, மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, மணிலா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிபராக இருப்பது பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர். கடந்த 2022ம் ஆண்டில், டியுடெர்ட்டியை வீழ்த்தி, மார்கோஸ் அதிபரானார்.
மணிலாவின் முன்னாள் மேயராக இருந்த போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் புழக்கத்தில் இருந்த சட்டவிரோத போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க முற்பட்ட டியுடெர்ட், அதற்காக மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பலரை மொத்தமாக கொன்று குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை, அவரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் புகார் எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட், முன்னாள் அதிபர் டியுடெர்ட்டியை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது.
அதன்படி நேற்று, ரோட்ரிகோ டியுடெர்ட், மணிலா சர்வதேச விமான நிலையத்தில் ஹாங்காங்கில் இருந்து வந்து இறங்கியதும், மணிலா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் அவர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.