Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ அமெரிக்காவில் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 5 பேர் காயம்

அமெரிக்காவில் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 5 பேர் காயம்

அமெரிக்காவில் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 5 பேர் காயம்

அமெரிக்காவில் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 5 பேர் காயம்

ADDED : செப் 30, 2025 09:14 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: டெக்சாஸில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில் தேவாலயம் ஒன்று உள்ளது. அங்கு பலர் கூடியிருந்தபோது திடீரென அங்கிருந்த ஒருவன், நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினான். அதை தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.

தற்போது மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. டெக்சாஸில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பல மணி நேரத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டான். அவன் 34 வயதான கெரியன் ரஷாத் ஜோன்ஸ் என்று அடையாளம் காணப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கெரியன் ரஷாத் ஜோன்ஸ் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 5 வழக்குகள் உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us