Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 46 பேர் பலி

பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 46 பேர் பலி

பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 46 பேர் பலி

பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 46 பேர் பலி

ADDED : அக் 23, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
உகாண்டா: கம்பாலா: உகாண்டாவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 46 பேர் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்தனர்.

கிழக்கு ஆப்ரிக்க நாடானா உகாண்டாவில் கம்பாலா-குலு நெடுஞ்சாலை, அந்நாட்டின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். நேற்று இந்த சாலையில் எதிரெதிர் திசைகளில் சென்ற இரண்டு பஸ்கள், முன்னே சென்ற லாரி, கார் ஆகிய 2 வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோ து விபத்து ஏற்பட்டது.

இரண்டு பஸ்களும் மோதிக் கொண்டதில், அருகில் சென்ற மற்ற வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கின. இதில் பேருந்தில் பயணித்த 46 பேர் உயிரிழந்தனர். மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் காயமடைந்தனர். முதலில், இந்த விபத்தில், 63 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. உகாண்டாவில், கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 5,144 பேர் உயிரிழந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us