Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ புலம்பெயர்ந்தோரை அடைக்க முதலைகள் அகழி வளாகம்

புலம்பெயர்ந்தோரை அடைக்க முதலைகள் அகழி வளாகம்

புலம்பெயர்ந்தோரை அடைக்க முதலைகள் அகழி வளாகம்

புலம்பெயர்ந்தோரை அடைக்க முதலைகள் அகழி வளாகம்

ADDED : ஜூன் 25, 2025 05:47 AM


Google News
புளோரிடா : அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோரை நாடு கடத்தும் பணியில் அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

அவருக்கு உதவும் வகையில் புளோரிடாவில் உள்ள எவர்கிளேட் பகுதியில் மாகாண நிர்வாகம், சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை தங்க வைக்க, தனி வளாகம் கட்டி வருகிறது. இங்கு, 5,000 பேரை தங்க வைக்க முடியும்.

இந்த வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதி, சதுப்பு நிலங்கள், புல்வெளிகள், காடுகள் கழிமுகங்களை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான பகுதியாகும்.

அதனால், இங்கு தங்க வைக்கப்படும் சட்டவிரோத குடியேறிகள் எளிதில் தப்ப முடியாது. ஏனெனில் இந்த மையத்தை சுற்றி முதலைகள், பாம்புகள் சூழ்ந்த சதுப்பு நிலம் உள்ளது. அடுத்த மாதம் முதல் தற்காலிக கூடாரத்தில் இந்த மையம் செயல்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us