Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி

துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி

துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி

துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி

ADDED : ஜூன் 11, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மகன் ஹன்டர் பைடன் குற்றவாளி என கோர்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மகன் ஹன்டர் பைடன் , இவர் தனக்கு கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதை மறைத்து 2018-ஆம் ஆண்டு கைத்துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வாங்கியதாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கி வாங்கும் எவராயினும் அவர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருக்க கூடாது என்ற விதி உள்ளது.

இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் போதை மருந்து பழக்கத்தை மறைத்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் அவர் குற்றவாளி என கோர்ட் அறிவித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us