Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ செக் குடியரசு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா முதலிடம்

செக் குடியரசு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா முதலிடம்

செக் குடியரசு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா முதலிடம்

செக் குடியரசு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா முதலிடம்

ADDED : ஜூன் 25, 2025 08:33 AM


Google News
Latest Tamil News
ஆஸ்ட்ரவா : செக்குடியரசில், 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' சர்வதேச தடகள போட்டி நடந்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற நீரஜ் சோப்ரா 27, பங்கேற்றார்.

சமீபத்தில் நடந்த பாரிஸ், டைமண்ட் லீக் தடகளத்தில் நீரஜ் சோப்ரா (88.16) முதலிடம் பிடித்து, பட்டம் வென்றார். இதனால் மீண்டும் இவர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இம்முறை முதல் வாய்ப்பில் 'பவுல்' செய்த நீரஜ் சோப்ரா, அடுத்து 83.45 மீ., துாரம் எறிந்தார். 3வது வாய்ப்பில் அதிகபட்சம் 85.29 மீ., துாரம் எறிந்தார். 4, 5வது வாய்ப்பில் (82.17, 81.01) ஏமாற்றிய இவர், கடைசி வாய்ப்பை பவுல் செய்தார். இருப்பினும் நீரஜ் சோப்ரா முதலிடம் (85.29 மீ.,) பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் தவ் ஸ்மித் (84.12 மீ.,), கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (83.63 மீ.,) இரண்டு, மூன்றாவது இடம் பிடித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us