Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்

பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்

பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்

பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்

ADDED : மார் 25, 2025 06:37 PM


Google News
Latest Tamil News
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு கிளம்பிய விமானம் நடுவானில் பறந்த போது, பாஸ்போர்ட் கொண்டு வருவதை மறந்தது விமானிக்கு நினைவுக்கு வந்தது. இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் அமெரிக்காவிலேயே தரையிறக்கப்பட்டது.

கடந்த 22ம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 257 பயணிகளுடன் யுனைட்டைட் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் சீனாவின் ஷாங்காய் நகருக்கு கிளம்பியது. விமானம் கிளம்பி இரண்டு மணி நேரம் கடந்த நிலையில், பாஸ்போர்ட் கொண்டு வராததை விமானி உணர்ந்தார். இது குறித்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் யுடர்ன் எடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து மாற்று விமானம் மூலம் பயணிகள் ஷாங்காய் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us