Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

Latest Tamil News
ஷிகாட்ஷே: திபெத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இன்று அதிகாலை 5.11 மணியளவில் திபெத்தின் ஷிகாட்ஷே நகரில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் லேசாக குலுங்கின.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், மீட்பு படைகளை அனுப்பி வைத்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

கடந்த ஜனவரி மாதம் திங்ரி கவுண்டி மாகாணத்தில், ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 120 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us