Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியது ரஷ்யா

Latest Tamil News
மாஸ்கோ: உக்ரைனின் முக்கிய போக்குவரத்து நகரமான, டோனெட்ஸ்க் மாகாணத்தின் போக்ரோவ்ஸ்க்கை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022, பிப்., முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.

போரை நிறுத்த ரஷ்யாவுக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுத்ததுடன் பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், கிழக்கு உக்ரைனின் முக்கிய போக்குவரத்து நகரமான போக்ரோவ்ஸ்க்கை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. இதேபோல், கார்கிவ் பகுதியில் உள்ள வோவ்சான்ஸ்க் நகரமும் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதற்கு முன்னதாக ரஷ்யாவின் ராணுவ தளபதி வலேரி கெராசிமோவ், அதிபர் புடினிடம் இந்த தகவலை பகிர்ந்துகொண்டார்.

இந்நகரகத்தை கைப்பற்ற ரஷ்யா கடந்த ஆண்டு முதல் முயன்று வந்தது. ஆனால் இந்த தகவலை உக்ரைன் ராணுவம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜ்ஜியா ஆகிய நான்கு உக்ரைன் மாகாணங்களை இணைத்துக் கொண்டதாக ரஷ்யா ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தப் பகுதிகளில் ராணுவச் சட்டத்தையும் அமல்படுத்தியது. போக்ரோவ்ஸ்க் நகரத்தை கைப்பற்றுவது என்பது டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை முழுமையாக கைப்பற்றும் ரஷ்யாவின் பெரிய இலக்கின் ஒரு பகுதியாகும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us