Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா வாக்களிக்க தடை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா வாக்களிக்க தடை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா வாக்களிக்க தடை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா வாக்களிக்க தடை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ADDED : செப் 18, 2025 08:26 PM


Google News
Latest Tamil News
டாக்கா: நாட்டை விட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வரப்போகும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க தேர்தல் கமிஷன் தடை விதித்தது.

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 72. கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்தார். தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ளது. வங்கதேசத்திற்கு 2026ம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தலை நடத்திட தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பதவி இழந்து நாட்டைவிட்டு வெளியேறி ஷேக் ஹசீனா மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வாக்களிக்க தடைவிதித்தும், தேசிய அடையாள அட்டை முடக்கி வைத்தும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஷேக் ஹசீனா ஆட்சியின் போது பணியாற்றிய ராணுவ உயரதிகாரி, அவரது குடும்பத்தினர் தேர்தலில் வாக்களிக்க தடை விதித்துள்ளது தேர்தல் கமிஷன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us