கச்சத்தீவுக்கு இலங்கை அதிபர் 'திடீர்' பயணம்
கச்சத்தீவுக்கு இலங்கை அதிபர் 'திடீர்' பயணம்
கச்சத்தீவுக்கு இலங்கை அதிபர் 'திடீர்' பயணம்

யாழ்ப்பாணம் : இலங்கை அதிபர் அனுர குமார, இன்று( செப்.,01) மாலை திடீரென கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மீனவர்களிடம் பேசிய அவர், 'கச்சத்தீவை எந்த காரணம் கொண்டும் விட்டுத்தரப் போவதில்லை' என தெரிவித்தார்.
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதால், மீனவர்களை பாதுகாப்பதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், 'தமிழக மீனவர்கள் 800 பேர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு, கச்சத்தீவை மீட்பதே, நிரந்தரத் தீர்வு,' என கூறினார்.
மேலும், 'கச்சத் தீவை, இந்தியா திரும்பப்பெற வேண்டும் எனவும் அதற்கான, நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து, விஜய் பேச்சுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத், கண்டனம் தெரிவித்தார். மேலும், அவர், 'தமிழகத்தில் தேர்தல் காலங்களில், கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுவது, தமிழக அரசியல்வாதிகளின் வழக்கம்' எனவும் விமர்சித்தார்.



