Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ பாலியல் தொழிலாளிகளை தாக்கி கொள்ளை: சிங்கப்பூரில் இரண்டு தமிழர்களுக்கு சிறை

பாலியல் தொழிலாளிகளை தாக்கி கொள்ளை: சிங்கப்பூரில் இரண்டு தமிழர்களுக்கு சிறை

பாலியல் தொழிலாளிகளை தாக்கி கொள்ளை: சிங்கப்பூரில் இரண்டு தமிழர்களுக்கு சிறை

பாலியல் தொழிலாளிகளை தாக்கி கொள்ளை: சிங்கப்பூரில் இரண்டு தமிழர்களுக்கு சிறை

ADDED : அக் 05, 2025 12:32 AM


Google News
சிங்கப்பூர்: சிங்கப்பூரில், பாலியல் தொழிலாளிகளை தாக்கி கொள்ளையடித்த இரண்டு தமிழர்களுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி டைசன், 23, ராஜேந்திரன் மயிலரசன், 27, ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறையை கழிக்க சிங்கப்பூர் சென்றனர். லிட்டில் இந்தியா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்களை அணுகிய முகம் தெரியாத நபர், பாலியல் தொழில் தொடர்பாக இரண்டு பேரின் மொபைல் போன் எண்ணை கொடுத்து விட்டுச் சென்றார்.

இதையடுத்து, இருவரும் அந்த மொபைல் எண் ணுக்கு தொடர்பு கொண்டு பேசி, இரு பெண்ணைகளை ஹோட்டல் அறைக்கு வரவழைத்தனர். அறைக்குள் வந்ததும் ஒரு பெண்ணின் கை, கால்களை கட்டி, கடுமையாக தாக்கி, அவரிடம் இருந்த நகைகள், பணத் தை கொள்ளையடித்தனர்.

மற்றொரு பெண்ணிடம் ரொக்கம், இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை கொள்ளை அடி த்து விட்டு, அங்கிருந்து தலைமறைவாகினர்.

இது தொடர்பாக இரண்டு பெண்களும் அளித்த புகாரில், ஆரோக்கியசாமி, ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், 12 பிரம்படிகளும் தர நீதிமன்றம் உத்தரவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us