துவங்கியது ஐ.நா., பொதுச்சபை கூட்டம்: 7 போர்களை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் தம்பட்டம்
துவங்கியது ஐ.நா., பொதுச்சபை கூட்டம்: 7 போர்களை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் தம்பட்டம்
துவங்கியது ஐ.நா., பொதுச்சபை கூட்டம்: 7 போர்களை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் தம்பட்டம்

சீனா மீது குற்றச்சாட்டு
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நான் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா போன்றவை கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், இந்தப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆக்கமும், ஊக்கமும்
இதுபோலவே, மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போரும் முடிவுக்கு வரவில்லை. பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் வாயிலாக, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, உலக நாடுகள் ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகின்றன. ஒரு பயங்கரவாத செயலை, இந்த நாடுகள் மறைமுகமாக ஆதரிக்கின்றன. அமெரிக்காவுக்கு தற்போது பொன்னான காலம் உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய தடையாக இருந்தது, சட்டவிரோதமாக புலம் பெயர்ந்துள்ளோரே.
இறக்குமதி வரி
அதனால்தான், இந்த விஷயத்தில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். அதற்காகவே, விசா கட்டு ப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த விஷயத்தில் எச்சரிக்கை விடுக்கிறேன். புலம் பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தாவிட்டால், மிகப் பெரிய பாதிப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடும். வர்த்தகம் என்பது இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் இருக்க வேண்டும். இதில் ஒருதலைபட்சமாக இருப்பதை ஏற்க முடியாது. இதற்காகவே, பல நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளோம்.