Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ஹமாஸ் செய்த அட்டூழியங்கள்: மறக்கவில்லை என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு

ஹமாஸ் செய்த அட்டூழியங்கள்: மறக்கவில்லை என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு

ஹமாஸ் செய்த அட்டூழியங்கள்: மறக்கவில்லை என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு

ஹமாஸ் செய்த அட்டூழியங்கள்: மறக்கவில்லை என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு

ADDED : செப் 03, 2025 07:46 AM


Google News
Latest Tamil News
ஜெருசலேம்: 'ஹமாஸ் படையினருக்கு எதிரான இஸ்ரேலின் போர் காசாவில் சீக்கிரம் முடிவடைய வேண்டும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேல்- ஹமாஸ் படையினருக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் தொடங்கியதிலிருந்து 62,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரையும் மீட்டு வர ராணுவத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களிடம், பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஹமாஸ் படையினருக்கு எதிரான போர் காசாவில் முடிவுக்கு வர வேண்டும். அக்டோபர் 7ம் தேதி தாக்குதலின் போது ஹமாஸ் செய்த அட்டூழியங்கள் பிடிவாதமானது.

மறக்க முடியாது

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள், எரிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் காசாவில் சுரங்கப் பாதைகளுக்குள் கொண்டு செல்லப்பட்ட பிணைக்கைதிகள் ஆகியோரை நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம். அவர்கள் அனைவரையும் மீண்டும் கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

லெபனானில் ஹிஸ்புல்லா படையினருடனும், ஈரானுடனும் போராடினோம். இப்போது நாம் ஹவுதி படையினரை எதிர்கொள்கிறோம். போர் முழுவதும் நாங்கள் மிகவும் கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம், அவற்றை நாங்கள் உண்மையில் செயல்படுத்த முடியும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் இஸ்ரேல் அரசை ஒரு பெரிய வெற்றியை நோக்கி முன்னேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை

செயல்படுத்தினோம்.

வெற்றி பெறுவோம்

நான் உங்களை நம்பியிருக்கிறேன், இஸ்ரேல் மக்கள் அனைவரும் உங்களை அரவணைத்துக் கொள்கிறார்கள். கடவுளின் உதவியுடன், ஒன்றாக நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு பாதுகாப்பு படையினரிடம் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us