இன்று உலக தியான தினம்!

21-டிச-2025

தியானத்தின் நன்மைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் டிச. 21ல் உலக தியான தினம் கொண்டாடப்படுகிறது.

21-டிச-2025

உடல், உயிர், மனம் மூன்றையும் இணைத்து அமைதி பெறுவதற்கான செயல் முறையே தியானம்.

21-டிச-2025

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு தியானப் பயிற்சி அவசியம். 

21-டிச-2025

மன அமைதியும், நிம்மதியும் தியானத்தால் பெற முடியும். பொறுமையான மனம் இருந்தால் உடல் ஒத்துழைக்கும்.

21-டிச-2025

மனஅழுத்தத்தால் மனம் குழம்புகிறது. அதனால், பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. தியானம் செய்வதால் மனம் குழம்பாமல் தெளிவாகும்.

21-டிச-2025

ஒவ்வொரு எண்ணத்திற்கு நடுவில் சிறிய இடைவெளி வரும். அது சூன்யம், ஒன்றுமில்லா தன்மை, மனமற்ற நிலை எனப்படும்.

21-டிச-2025

தொடர்ந்து பயிற்சி செய்ய, எண்ணங்களிலிருந்து விலகி, உடலுக்கும் மனதுக்குமான இடைவெளியை உணர்வோம்.

21-டிச-2025