ஆடம்பர திருமணமா? டில்லியின் வரலாற்று நினைவு சின்னங்கள் இனி வாடகைக்கு கிடைக்கும் !

18-நவ்-2025

தலைநகர் டில்லியை சுற்றி, முகலாயர் காலத்து வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன.

18-நவ்-2025

அவற்றில், தாஜ்மஹால் உள்ளிட்ட பல நினைவுச் சின்னங்கள் இந்திய தொல்லியல் துறை பராமரிப்பின் கீழுள்ளன.

18-நவ்-2025

இந்நிலையில், நினைவுச் சின்னங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, கலாசார விழாக்கள் மற்றும் திருமணத்துக்கு வாடகைக்கு விட டில்லி அரசு முடிவு செய்துள்ளது.

18-நவ்-2025

இதற்காக, அனைத்து நினைவுச் சின்னங்களிலும் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தும் பணிகளை சுற்றுலா அமைச்சகம் செய்து வருகிறது.

18-நவ்-2025

'டெஸ்டினேஷன் வெட்டிங்' எனப்படும், பிரபலமான இடத்தை தேர்வு செய்து, திருமணம் செய்ய வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது.

18-நவ்-2025

எனவே, வரலாற்றின் அழகும், நவீன வசதிகளும் ஒரு சேர கிடைக்கும் இடமாக டில்லி நகரை மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

18-நவ்-2025

முதல் கட்டமாக, 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று சிப்பாய் கலக நினைவுச் சின்னம். இரண்டாவது, காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள தாரா சிகோ நுாலகம்.

18-நவ்-2025

மூன்றாவது, குத்ஸியா தோட்டம். இதுவும் சிவில் லைன்ஸ் பகுதியில் காஷ்மீர் கேட் அருகிலுள்ளது. இது போன்று வசந்த் விஹார், சாந்தினி சவுக் போன்ற பகுதிகளில் தொடர்கிறது.

18-நவ்-2025