உயிரியல் பாரம்பரிய தளமாக ஈரோடு நாகமலை குன்று அறிவிப்பு

09-அக்-2025

தமிழக அரசின் உயிரியல் பன்மைச் சட்டத்தின் கீழ், கடந்த 2022 நவம்பரில், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.

09-அக்-2025

தொடர்ந்து காசம்பட்டி, எலத்துார் ஆகியவை இணைந்த நிலையில், 4வது உயிரியல் பாரம்பரிய தளமாக, ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

09-அக்-2025

இது இடம்பெயர்ந்து வரும் மற்றும் உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், பல்வேறு சதுப்பு நில சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு, ஒரு முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது.

09-அக்-2025

இங்குள்ள ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்று நிலங்கள், பாறை பகுதிகள் ஆகியவை, பல்லுயிர்களுக்கு வாழ்விடமாக உள்ளன.

09-அக்-2025

கடந்த, 2024ன் கணக்கெடுப்பின்படி, இங்கு 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள், 7 பாலுாட்டிகள், 11 ஊர்வனங்கள், 5 சிலந்தி இனங்கள், 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

09-அக்-2025

இங்குள்ள முக்கிய உயிரினங்களில், பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனை பருந்து ஆகியவை அடங்கும்.

09-அக்-2025

தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட, 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சுவாமி கல்வெட்டு ஒன்று, அதன் கலாசார பாரம்பரியத்தை காட்டுகிறது.

09-அக்-2025

இரும்பு காலத்தைச் சேர்ந்த கற்குவை வட்டங்கள், பாறை மறைவிடங்கள், பழங்கால கலைப்பொருட்கள் ஆகியவற்றின் சான்றுகள், வரலாற்று ஆழத்தை எடுத்துக்காட்டுகின்றன.

09-அக்-2025