ஆந்திராவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?

23-ஜன-2026

'பேஸ்புக், எக்ஸ், வாட்ஸாப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்களை, இளம்தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

23-ஜன-2026

இந்த சூழலில், 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த, பசிபிக் கடல் தீவு நாடான ஆஸ்திரேலியா தடை விதித்தது.

23-ஜன-2026

புதிதாக யாரும் கணக்கு துவங்க முடியாது என்றும், பயன்பாட்டிலுள்ள கணக்குகள் நீக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.

23-ஜன-2026

தடையை மீறும் நிறுவனங்களுக்கு, அங்கு 3 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

23-ஜன-2026

சென்னை உயர் நீதிமன்றமும், இது போன்ற தடைகளை இந்தியாவில் அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு, கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது.

23-ஜன-2026

இந்நிலையில், ஆந்திராவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க ஆலோசிப்பதாக, அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

23-ஜன-2026

'சிறுவர்-சிறுமியர் சமூக ஊடகங்களில் இருக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் தாங்கள் காணும் உள்ளடக்கத்தை முழுமையாக புரிந்து கொள்வதில்லை.

23-ஜன-2026

இதைக் கட்டுப்படுத்த, ஒரு வலுவான சட்ட கட்டமைப்பு தேவைப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

23-ஜன-2026