தர்பூசணியை நம்பி சாப்பிடலாம் : உணவு பாதுகாப்பு துறை தகவல்

04-ஏப்-2025

கலப்படமிக்க தர்பூசணிகள் சென்னையில் எங்கேயும் கண்டறியப்படவில்லை. தாராளமாக அவற்றை நம்பி வாங்கி சாப்பிடலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

04-ஏப்-2025

ரசாயனம் கலந்த, கலப்படமிக்க தர்பூசணி பழங்கள் கண்டறிவது மிகவும் சுலபம். இயற்கையாக தர்ப்பூசணிக்கென ஒரு கலர் இருக்கிறது.

04-ஏப்-2025

இளம்சிவப்பை விட்டு, மிகவும் சிவந்த கலரில் தர்பூசணி இருந்தாலோ, சாப்பிடும் போது அதிக சர்க்கரை போல இனித்தாலோ, அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கும்.

04-ஏப்-2025

தர்பூசணியில் செயற்கை நிறத்திற்காகவும், சுவைக்காகவும் ஊசி மூலம் ரசாயனத்தை தர்பூசணியில் ஏற்றினால் அது 24 மணி நேரத்தில் ஊசி செலுத்திய வழியாகவே வெளியேறிவிடும்.

04-ஏப்-2025

மேலும் அந்த பழத்தை அறுத்து பார்த்தால் உள்ளே கன்னிப்போய் இருக்கும். அதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

04-ஏப்-2025

கோடைகாலங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை தர்பூசணியில் இருக்கும் லைக்கோபின் திரவம் சரி செய்வதுடன், 'ஹீட் ஸ்ட்ரோக்'கை தடுக்கிறது

04-ஏப்-2025