காற்று மாசு அளவு குறித்து அறிவோமா... பாதிப்புகள் என்னென்ன?

19-டிச-2025

காற்றின் தர அளவுகோல் மற்றும் பாதிப்புகள் குறித்து அறிவோமா... 50க்கும் கீழாக இருந்தால் மட்டுமே சுவாசிக்க உகந்த காற்று. இதனால் ஆரோக்கியத்தில் பாதிப்பு இல்லை.

19-டிச-2025

51 - 100 அளவு திருப்திகரம்; இதனால் லேசான சுவாசக் கோளாறு ஏற்படலாம்.

19-டிச-2025

101 - 200 அளவு - மிதமானது, மோசம். இதனால் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.

19-டிச-2025

201 - 300 அளவு ஆரோக்கியமற்றது. இந்த அளவில் நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம்.

19-டிச-2025

300 மேல் அளவு மிகவும் ஆரோக்கியமற்றது ஆகும். இந்த சமயத்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

19-டிச-2025

மிக ஆபத்தான காற்று மாசு என்பதை 'பி.எம்., 2.5' என, உலக சுகாதார அமைப்பு அழைக்கிறது.

19-டிச-2025

பி.எம்., 2.5 என்பது அளவு தலைமுடியின் சராசரி தடிமனை விட, 40 மடங்கு சிறியது. சுவாசிக்கும் போது, மூக்கின் செயல்பாட்டால் மற்ற மாசு துகள்கள் உட்செல்வது தடுக்கப்படும்.

19-டிச-2025

ஆனால், பி.எம்., 2.5 நுண்ணிய துகள்கள், நேராக நம் நுரையீரல் மற்றும் ரத்த ஓட்டத்தில் கலக்க கூடும்.

19-டிச-2025

இதனால், சுவாச பிரச்னை, இதய கோளாறு, பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.

19-டிச-2025