'சி-விஜில்' பயன்பாடு தமிழகத்தில் மந்தம்!

05-ஏப்-2024

வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட, தேர்தல்விதிமீறல்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க 'சி-விஜில்'எனும் செயலியை தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

05-ஏப்-2024

அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதை தாங்கள் அறியநேர்ந்தால், அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, உரிய ஆதாரத்துடன் செயலியில் பதிவு செய்து, புகார் தெரிவிக்கலாம்.

05-ஏப்-2024

தகவல் கொடுப்பவர் தனது பெயர் விவரத்தை வெளியிடாமல் ரகசியம் காக்கவிரும்பினால் அதற்கான வசதியும் அதில் உள்ளது.

05-ஏப்-2024

இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

05-ஏப்-2024

மேலும் புகார் கொடுத்தவரின் அலைபேசி எண்ணிற்கு நடவடிக்கை எடுத்த பின் அது தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

05-ஏப்-2024

மீறலைப் புகாரளிக்க cVIGIL இல் பயனர் தனது கேமராவை ஆன் செய்தவுடன், பயன்பாடு தானாகவே புவி-குறியிடல் (location) அம்சத்தை செயல்படுத்துகிறது.

05-ஏப்-2024

இதன் பொருள், பறக்கும் படைகள் புகாரளிக்கப்பட்ட மீறலின் துல்லியமான இருப்பிடத்தை அறிய முடியும், மேலும் குடிமக்கள் கைப்பற்றிய படத்தை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.

05-ஏப்-2024

இந்த தேர்தலில் அதிகபட்சமாக, கேரளாவில் 71,168 புகார்கள் வந்துள்ளன. இவற்றில், 70,929 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

05-ஏப்-2024

அதற்கு அடுத்தபடியாக, உத்தரகண்ட் மாநிலத்தில், 14,684; கர்நாடகாவில் 13,959; ஆந்திராவில் 7,055 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

05-ஏப்-2024

இதன் வழியே புகார் அளிப்பது, தமிழகத்தில் மந்தமாகவே உள்ளது. தமிழகத்தில், 2,168 புகார்கள் பெறப்பட்டதில், 2,139 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

05-ஏப்-2024