இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்

17-அக்-2025

உலகில் எதாவது ஒரு இடத்தில் வறுமையால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி.

17-அக்-2025

இவர், சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் தான் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது.

17-அக்-2025

பின்னாளில் ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.

17-அக்-2025

வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.

17-அக்-2025

உணவு, குடிநீர், உடை, இருப்பிடம், கல்வி, வேலை இல்லாதவர்கள் வறுமையானவர்கள். உலகில் 110 கோடி பேர் பல வழிகளில் வறுமையால் அவதிப்படுகின்றனர்.

17-அக்-2025

அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் என அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும்.

17-அக்-2025

இவை இல்லாத அனைவரும், வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுவர். பட்டினி மற்றும் வன்முறைக்கு வறுமை வழி வகுக்கிறது.

17-அக்-2025

ஏழ்மை நிலையில் இருப்பவர்களை, ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்றிட முடியாது. கல்வி வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிக்கலாம்.

17-அக்-2025