கடலில் மூழ்கிய பண்டைய துவாரகாவில் வழிபட்ட மோடி !

27-பிப்-2024

பிரதமர் நரேந்திர மோடி, தேவபூமி துவாரகா மாவட்டத்தில், பேட் துவாரகா தீவுக்கு அருகே, கடலில் மூழ்கியுள்ள பண்டைய துவாரகா நகருக்கு சென்றார்.

27-பிப்-2024

இதற்காக, ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடலில் நீச்சலடித்து, கடற்படை ஆழ்கடல் வீரர்கள் உதவியுடன் சென்றார். ஸ்கூபா டைவிங் செய்வதற்கான ஹெல்மெட் அணிந்தார்.

27-பிப்-2024

காவி நிறத்தில் பாரம்பரிய உடையுடன் இருந்த அவர், கடலுக்குள் மூழ்கிய நகரில் சம்மணமிட்டு பிரார்த்தனை செய்தார்.

27-பிப்-2024

மேலும், கையில் எடுத்துச் சென்ற மயிலிறகை காணிக்கையாகச் செலுத்தினார். சிறிது நேரம் அங்கு தியானத்தில் இருந்த அவர், பண்டைய துவாரகா நகரின் பகுதிகளை பார்த்தார்.

27-பிப்-2024

நீரில் மூழ்கியுள்ள துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீக அனுபவம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்

27-பிப்-2024

ஆன்மிக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தியின் ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன்.

27-பிப்-2024

அங்கு இருந்தபோது, அந்த பண்டைய நகரைத் தொட்டபோது, 21ம் நுாற்றாண்டில், இந்தியாவின் பிரமாண்ட வளர்ச்சி என் கண் முன்னே வந்து சென்றது.

27-பிப்-2024

கடலுக்கடியில் இருந்தபோது, நம் நாட்டை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற உறுதி மேலும் வலுபட்டுள்ளது.

27-பிப்-2024

இந்த புனித நகரை பார்க்க வேண்டும்; அதை தொட வேண்டும் என்ற என் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது. இது ஒரு திரில்லான அனுபவமாக இருந்தது என மோடி கூறியுள்ளார்.

27-பிப்-2024

ஹிந்து கடவுள் கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகா நகரம், மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாகக் கருதப்படுகிறது.

27-பிப்-2024

இது கடலுக்கடியில் மூழ்கியுள்ளது. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அதன் சில பகுதிகளை மீட்டுள்ளனர். ஆழ்கடலில் நீச்சலடித்து சென்று அதை பார்க்க முடியும்.

27-பிப்-2024