குடியரசு தினம்... காரணத்தை தெரிந்து கொள்வோமா?
குடியரசு என்றால், 'மக்களாட்சி' என்று பொருள். சுதந்திரத்துக்காக பாடுபட்ட பல அமைப்புகள் இணைந்து, ஜனவரி 1930-ல் பாகிஸ்தான் பகுதியில் உள்ள லாகூரில் மாநாடு நடத்தின.
மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார் ஜவஹர்லால் நேரு. காந்தியடிகள் தலைமை தாங்கினார். அதில், 'பூர்ண சுவராஜ்' பெறுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பொருள், முழுமையான சுதந்திரம் பெறுவதே நோக்கம் என்பதாகும்.
அதை செயல்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும், ஜனவரி 26ம் நாளை சுதந்திர தினமாக கடைபிடித்து, ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கேட்டுக் கொண்டார்; அதன்படியே கடைபிடிக்கப்பட்டது.
முறையான சுதந்திரம், 1947ல் பெற்றபின், இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவு உருவாக்கப்பட்டது.
ஜவஹர்லால் நேருவை பிரதமராக கொண்ட முதல் நாடாளுமன்றம், இந்த வரைவு குறித்து, இரண்டு ஆண்டுகள் விவாதம் நடத்தியது.
இறுதியாக, ஜனவரி 24, 1950ல் அரசியல் அமைப்பு சட்ட வரைவு, திருத்தங்களுடன் ஏற்கப்பட்டது.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கையால் எழுதிய அரசியல் அமைப்பு சட்டப் புத்தகம் உருவாக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.
இதை, மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாட முடிவு செய்தார் நேரு.
ஏற்கனவே, காந்தியடிகள் சுதந்திர தினமாக அறிவித்திருந்த, ஜனவரி 26-ம் நாளையே, மக்களாட்சி மலர்ந்த நாளாக, அதாவது குடியரசு தினமாக அறிவித்தார். உரிய நடைமுறையுடன் கொண்டாடப்படுகிறது.