இன்று அணு ஆயுத ஒழிப்பு தினம்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா மீது 1945 ஆக., 6ல் அமெரிக்கா உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது உலகில் பேர் அழிவை ஏற்படுத்தியது.

ஆபத்தை விளைவிக்கும் இவற்றை கைவிட வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 26ல் 'அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் சர்வதேச தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

2013ல், ஐ.நா., பொதுச் சபை, அணு ஆயுதங்களை ஒழிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

பின் 2014 செப்., 26 அன்று முதல் அணு ஆயுத ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

அணு ஆயுதத்தின் பாதிப்புகளை விளக்கும் விதமாகவும், அதை மக்களின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

உலகில் 12,241 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றை குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு உலக சமூகத்தை வலியுறுத்துகிறது.

உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.