அருணாசலப் பிரதேசத்தின் அழகிய நகரம் தவாங்.. சுற்றுலாவிற்கு தயாராகுங்கள்...

29-மார்-2024

அருணாசலப்பிரதேசத்தில் சுமார் 10,000 அடி உயரத்தில் இமயமலைக்கு நடுவே இயற்கை அழகு, ஆன்மீக சூழலால் நம்மை கவரும் வகையில் இருக்கும் நகரம் தவாங்.

29-மார்-2024

தவாங் பள்ளத்தாக்கு வடக்கில் திபெத், தென்மேற்கில் பூட்டான் மற்றும் கிழக்கில் சேலா மலைத்தொடரை எல்லையாக கொண்டுள்ளது. இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன.

29-மார்-2024

தவாங் மடலாயம் : கடந்த 17 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த மடாலயம் இந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயமாகவும் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மடமாகவும் உள்ளது.

29-மார்-2024

சேலா பாஸ் : சுமார், 13,700 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பாஸ் தவாங்கை கவுகாத்தியின் திராங்குடன் இணைக்கிறது. சேலா ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. மிக உயரமான மலை பாதையாக கருதப்படுகிறது.

29-மார்-2024

ஷோங்கா-சேர் ஏரி : அழகிய செழுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட ஷோங்கா-ட்ஸர் ஏரி, மாதுரி ஏரி என்றும் அழைக்கப்படுகிறது.

29-மார்-2024

தவாங் போர் நினைவுச்சின்னம் : 1962 இந்திய-சீனப் போரில் நாட்டுக்காக போராடி வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் வீரத்தை நினைவாக இந்தச் சின்னம் அமைக்கப்பட்டது.

29-மார்-2024

நுரானாங் நீர்வீழ்ச்சி : இந்த 100 அடி உயரம் கொண்ட அழகிய நீர்வீழ்ச்சி, தவாங்கிலிருந்து 80 கிமீ தொலைவில் ஜெமிந்தாங் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

29-மார்-2024

கோரிசென் சிகரம் : அருணாச்சல பிரதேசத்தின் மிக உயரமான சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 22,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

29-மார்-2024

கமெங் ஆறு : அடர்ந்த காடுகள், ஆடம்பரமான நதி அமைப்பு கொண்டு ஒரு அழகிய ஆறு இது. இங்கு ராஃப்டிங் சாகசத்திலும் ஈடுப்படலாம்.

29-மார்-2024

பெங் டெங் சோ ஏரி, ஜஸ்வந்த் கர் போர் நினைவுச்சின்னம், தக்சங் கோம்பா, பும்லா பாஸ், சம்டென் யோங்சா மடாலயம், கெஷிலா சிகரம் மற்றும் நகுலா ஏரி போன்ற அழகிய இடங்களும் உள்ளன .

29-மார்-2024